loader
தாய்லாந்து மொழியில் திருக்குறள்!  மோடி வெளியிடுகிறார்...

தாய்லாந்து மொழியில் திருக்குறள்! மோடி வெளியிடுகிறார்...

தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் நுாலை இந்திய பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு இன்று முதல் 4-ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக மோடி செல்கிறார். இதனையடுத்து தலைநகர் பாங்காக்கில் நடக்கும் ஆசியான் - இந்தியா கிழக்கு ஆசியா ஆர்.சிஇ.பி. எனப்படும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணி ஆகிய அமைப்புகளின் மாநாடுகளில் மோடி பங்கேற்கிறார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு இன்று செல்லும் மோடி தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறளை வெளியிடுகிறார். அத்துடன் சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் 550-வது பிறந்த ஆண்டையொட்டி நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிடுகிறார்.
தாய்லாந்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். பாங்காக்கில் உள்ள சுலாலாங்கோர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சுவித் விபுல்ஸ்ரீஸ்த் திருக்குறளை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News