கோலாலம்பூர் அக்டோபர்- 20
முதல்முறையாக நடத்தப்படும் டத்தோ ஸ்ரீ புலேந்திரன் கிண்ண 'பெனால்ட்டி கிக்' போட்டி இன்று தலைநகரில் தொடங்கியது.
ஜொகூர், சிலாங்கூர், பேராக் இன்னும் பல மாநிலங்களில் இருந்து 48 குழுக்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். பத்து தொகுதியில் இருந்து செந்தூல் கிளப் அணி, ம.இ.கா வின் நிர்வாகச் செயலாளர் ஏ.கே ராமலிங்கம் தலைமையிலும், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு அணி, ம.இ.கா இளைஞர் அணியின் விளையாட்டுப் பிரிவு பொறுப்பாளர் அன்ட்ரூ தலைமையிலும் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
இப்போட்டியை டத்தோ ஸ்ரீ புலேந்திரன் இன்று காலையில் துவக்கிவைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த ஒரு தப்பான வழிக்கும் செல்லாமல் நமது இந்திய இளைஞர்கள் ஒற்றுமையாக விளையாட்டுப் போட்டிகள் போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்பதற்காகவும், நமது இளைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இப்படிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.
டத்தோ ஸ்ரீ புலேந்திரன் கிண்ணத்தை தட்டிசெல்லும் அணிக்கு 3000 வெள்ளி ரொக்கமும், 2-ஆம் நிலை அணிக்கு 2000 வெள்ளியும், 3-ஆம், 4-ஆம் நிலை அணிக்கு தலா 1000 வெள்ளி ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படும் என டத்தோ ஸ்ரீ புலேந்திரன் தெரிவித்தார்!
0 Comments