loader
சவுதி மன்னரின் மெய்க்காப்பாளர் சுட்டுக் கொலை!

சவுதி மன்னரின் மெய்க்காப்பாளர் சுட்டுக் கொலை!

சவுதி அரேபியா நாட்டு முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்.

அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 23-1-2015 அன்று இறந்தபின்னர் அவரது மகனும் தற்போதைய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜிஸ் சவுத்-தின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை ஜெத்தா நகரில் வசிக்கும் நண்பர் ஒருவரைச் சந்திக்க அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில்  அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்-ஐ நோக்கி அவரது நண்பர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில், இச்சம்பவம் பற்றிய தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கொலையாளியைச் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். அங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 போலீசார் காயமடைந்ததாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன!

 

0 Comments

leave a reply

Recent News