அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள அலமோகோர்டோ நகரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
அவருடன் காரில் மேலும் 3 சிறுமிகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே குடிபோதையில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், வேதனையான மற்றொரு விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் 12-13 வயதுக்கு இடைப்பட்டவர்கள்தான்.
தோழிகளான இவர்கள் 4 பேரும் காரில் குடிபோதையில் அதிவேகத்தில் பயணித்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சிறுமிகள் பயணித்த காரை அவர்கள் விரட்டிச் சென்றுள்ளனர்.
போலீசார் சேஸ் செய்வதை அறிந்ததும், காரை ஓட்டிய சிறுமி இன்னும் வேகமாகச் சென்றுள்ளார். இதனால் அந்த கார் போலீசாரின் 2 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. இறுதியாக வேக வரம்பு தொடர்பான பலகை ஒன்றில் மோதி கார் நின்றது.
அதுவரை காருக்குள் இருப்பது சிறுமிகள்தான் என்பது போலீசாருக்குத் தெரியாது. காரில் இருந்த சிறுமிகள் குடிபோதையில் வெளியே வருவதைம் கண்டதும் போலீசாரே அதிர்ச்சியடைந்து விட்டனர். இதனையடுத்து காவல்துறை உரிய நடவடிக்கையை மேற்கொண்டனர்!
0 Comments