ஒவ்வொரு படம் முடித்ததும் குடும்பத்துடன் வெளிநாடு செல்வது தளபதி விஜய்யின் வழக்கம். ஆனால், அண்மைய காலமாக அந்த வழக்கத்தை மாற்றியிருந்தார் விஜய்.
இந்நிலையில், 'பிகில்' படம் வரும் தீபாவளிக்குத் திரைக்கு வரும் நிலையில், அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவிருப்பதாலும், தற்போது அவர் வெளிநாடு சென்றுள்ளார்.
இதனையடுத்து விமான நிலையத்தில் அவர் மாஸ்க் அணிந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஒரு வேளை நம்ம மலேசியாவிற்கு வந்திருப்பாரோ புகைமூட்டம் இருப்பது தெரியாமல்?
0 Comments