ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையைத் திசை திருப்ப, இன்னொரு பிரச்னையைக் கிளப்புவது அரசியல் பாணி.
சமீபத்தில் மெட்ரிகுலேசன் விவகாரத்தில் வெறும் 1212 இடங்கள் மட்டும்தான் இந்திய மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல், இந்திய சமுதாயத்தினரின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரம், எதிர்ப்பலையை உருவாக்கிய குறுகிய காலத்தில், காட் விவகாரம் தற்போது கிளப்பி விடப்பட்டுள்ளது .
எனவே, அனைவரது கவனமும் தற்போது காட் மீது திசைதிருப்பப்பட்டு, மெட்ரிகுலேசன் விவகாரம் மறைந்துள்ளது.
அதனால, கொஞ்சம் ஊஷாரா இருங்க மக்களே... இரண்டு விவகாரத்திலும் கவனம் செலுத்துங்கள். இல்லை என்றால், மெட்ரிகுலேசன் விவகாரம் மறக்கடிக்கப்படும்!
(மக்களுடன் முகமூடி)
0 Comments