loader
அன்வார் தலைமையில் KLSICCI விருது விழா!

அன்வார் தலைமையில் KLSICCI விருது விழா!

கோலாலம்பூர் ஜுலை 26-

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் (KLSICCI) 90-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாபெரும் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக அதன் தலைவர் டத்தோ ராமநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க பிகே ஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை புரியவிருக்கிறார்.

எதிர்வரும்  செப்டம்பர் 7-ஆம் தேதி தலைநகரில் பிரம்மாண்ட மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில், நாடுதழுவிய நிலையில் சுமார் 1,200 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விருதளிப்பு முதன்மை அங்கமாக இடம்பெறும். இந்நிகழ்வில், மூவருக்கு பிளாட்டினம் விருதும், ஐவருக்கு இவ்வாண்டின் சிறந்த தொழில்முனைவர் விருதும், 40 பேருக்குத் தலைசிறந்த தொழில்முனைவருக்கான தங்க விருதும் வழங்கி சிறப்பிக்கப்படும் என்று டத்தோ ராமநாதன் குறிப்பிட்டார்.

சுற்றுலா, உலோகப் பொருள் தொழில்துறை, கட்டுமானத் துறை போன்ற 24 துறைகளில் சிறந்து விளங்கும் தொழில்முனைவர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்படுவர். இது வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவர்களுக்கு ஓர் ஊக்குவிப்பாக அமையும் என்று, நேற்று  கேஎல்எஸ்ஐசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் விவரித்தார்.

“நாங்கள் 90 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளோம். இந்தக் கொண்டாட்டத்தில் தகுதியான இந்திய  தொழில்முனைவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்கி சிறப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.  இந்தியர்கள் வர்த்தகத்தில் பீடு நடைபோட்டு நாட்டின் மேம்பாட்டிற்கு அளப்பரிய பங்காற்றி வருகின்றனர் என்பதற்கு இந்த விழா சான்றாக அமையும் என்பது திண்ணம்” என்று அவர் மேலும் சொன்னார்.

அதே வேளையில், வர்த்தகர்கள் மற்ற வர்த்தகர்களோடு தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, இதர துறைகளில் காணப்படும் வாய்ப்புகளையும் இந்நிகழ்ச்சியில் அறிந்து கொள்ளலாம். புதிய அறிமுகங்கள் வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவும் என்றும் ராமநாதன் குறிப்பிட்டார்.

விருது பெறத் தகுதியான தொழில்முனைவர்களை ‘பிகேஎஃப்’ என்றழைக்கப்படும் மிகப் பெரிய கணக்காய்வாளர் நிறுவனம் தேர்வு செய்யும். இதற்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் KLSICCI.com.my எனும் அகப்பக்கத்தின் வாயிலாக அல்லது 03-26931033 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு விருதுக்கான பாரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்!

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News