loader
கொரோனாவால் வடிவேலு பாதிப்பு!  நலமாக உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!

கொரோனாவால் வடிவேலு பாதிப்பு! நலமாக உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திற்கான பாடல் தொடர்பாக வடிவேலு, இயக்குனர் சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்று இருந்தனர். அந்தப் பணி முடிந்து சென்னை திரும்பிய நிலையில், வடிவேலுவுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் வடிவேலு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் வடிவேலு உடல்நிலை சீராக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், "அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. வடிவேலுவுக்கு முதல்நிலை அறிகுறி, S Drop அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம்" என அவர் கூறியுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News