loader
இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்!

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்!

ஒமிக்ரான் எனும் புதியவகை கொரோனா உலகை அச்சுறுத்த தொடங்கியிருக்கிறது.

அவ்வகையில் இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 23 ஆக அதிகரித்துள்ளது.

 கடந்த மாதம் 24-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News