சுவாமி ஸ்ரீ ரெஜித் குமார் தலைமையில் ஒளி உடல் செயல்பாடு எனும் நிகழ்வு உலகளாவிய நேரலையில் நடைபெறவுள்ளது.
இதன் மூலமாக தேவையான தெய்வீக ஆற்றலைப் பெற்று ஒளி உடல் செயல்பாட்டை நிகழ்த்தமுடியும் என்கிறார் சுவாமி ரெஜித் குமார்.
இந்த நேரலையில் கலந்துகொள்ளும் அனைவரும் விளக்கேற்றி, முருகப்பெருமான் படம் மற்றும் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளின் படங்களையும் வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
ஸ்ரீ ரெஜித் குமார் தியானத்தில் தூண்டப்படும் தெய்வீக ஆற்றல்களை ஒளிரும் விளக்குக்கு அனுப்புவார். இது பிரார்த்தனை செய்யும் அனைவரின் பூஜை அறையில் இருக்கும் விளக்கிற்கும் சென்றடைந்து, பிறகு அவர்களின் உடலுக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயதினரும் இந்த நேரலை நிகழ்வில் கலந்துகொள்ளலாம். இந்நிகழ்விற்கான பதிவு அனைவருக்கும் இலவசம். முதல் ஒளி உடல் செயல்பாடு அமர்வு இன்று நேரலையில் 17-10-2021 மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரம்) நடைபெறவுள்ளது.
மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கவும், வணிகர்களின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தவும், அதிக வேலை செய்பவர்களின் பதற்றங்களை குறைக்கவும் இத்ய் உதவும் என்று சுவாமி தெரிவித்துள்ளார்.
LMRK இயக்கத்துடன் இணைந்து இதில் பங்கேற்க www.lionmayura.org வலைதளத்தைப் பார்வை இடவும்.
பதிவு செய்ய : http://lionmayura.org/light.php
நேரடி ஒளிபரப்பு பார்க்க –
Facebook: https://www.facebook.com/lionmayura
YouTube: https://www.youtube.com/c/LionMayuraRoyalKingdom
விளம்பரம்:
0 Comments