loader
நாளை மாலை 5 மணியிலிருந்து தண்ணீர் வழக்க நிலைக்குத் திரும்பும்!

நாளை மாலை 5 மணியிலிருந்து தண்ணீர் வழக்க நிலைக்குத் திரும்பும்!

சுங்கை சிலாங்கூர் கட்டம் 1 நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எஸ்எஸ்பி 1 டபிள்யூடிபி)  மேம்படுத்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தொடங்கியதால் இன்று காலை 9 மணி முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள குழாய்கள் வறண்டு போகத் தொடங்கின.

இரவு 11 மணிக்குள் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தும் பணி முடிவடைய வேண்டும் என்றும், நாளை மாலை 5 மணி முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் தண்ணீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 16, இரவு 9 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாக மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டயாலிசிஸ் மையங்கள், கோவிட் -19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் இடங்களுக்கு மாற்று நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!

 

0 Comments

leave a reply

Recent News