loader
தன் வழக்கைத் தானே வாதாடப்போகும் நளினி!

தன் வழக்கைத் தானே வாதாடப்போகும் நளினி!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாகக் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் நளினி. இவர் தனது மகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காகவும், வயதான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் 6 மாதம் பரோல் கேட்டு அரசாங்கத்துக்கு மனு செய்தார். ஆனால், அதிமுக அரசாங்கம் அதைப் பரிசீலனை செய்யவில்லை.

ந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நாளை வருகிறது. இந்த வழக்கில் தன் சார்பில் தானே ஆஜராகி நளினி வாதாடவுள்ளார் என்கிற தகவல், அவர் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.

வாதியே தனது வழக்கில் ஆஜராகச் சட்டத்தில் இடம்முண்டு. அதன்படியே நளினி தனது பரோல் வழக்கில் ஆஜராகவுள்ளார். அப்போது தனது மனதில் அழுத்திக்கொண்டுள்ள விவகாரத்தை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது!

 

0 Comments

leave a reply

Recent News