loader
10 லட்சத்தைத் தாண்டியது கொரோனா தொற்று எண்ணிக்கை! இன்று 17,045 சம்பவங்கள்! 92 பேர் மரணம்!

10 லட்சத்தைத் தாண்டியது கொரோனா தொற்று எண்ணிக்கை! இன்று 17,045 சம்பவங்கள்! 92 பேர் மரணம்!

புத்ராஜெயா, ஜூலை 25: இன்று ஒரே நாளில் 17,045 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,13,438 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் மட்டும் 92 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த மரண எண்ணிக்கை 7,994 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 9,683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 844, 541ஆக உயர்ந்துள்ளது.

160, 903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 970 பேர், வெண்டிலேட்டர் ஆதரவில் 501 உள்ளனர்.

சிலாங்கூரில் மட்டும் இன்று அதிகபட்சமாக 8,500 சம்பவங்கள் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News