கோலாலம்பூர், ஜூலை 12: வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் கோவிட் 19 தாக்கத்தால் நாடு திரும்பிய நிலையில், அவர்கள் மீண்டும் தங்களின் கல்வியைத் தொடர ஏதுவாக, அவர்களுக்கான தடுப்பூசியை விரைந்து செலுத்தக் கோரி, அமைச்சர் கைரி ஜமாலுடினை, ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் கைரி ஜமாலுடின் உடனான இதற்கான சந்திப்பை ம.இ.கா தலைவர் மேற்கொண்டார்.
இதனை அடுத்து, அமைச்சர் கைரி ஜமாலுடின் ம.இ.கா தலைவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதோடு, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளதாக ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்துள்ளார்!
0 Comments