பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11: கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மலிது குறித்துக் கூறுகையில், மலேசியாவில் 9,105 நோய்த்தொற்றுகள் மற்றும் 5,194 மீட்டெடுப்புகள் பதிவாகியுள்ளதால், புதிய தினசரி கோவிட் -19 சம்பவங்கள் மீட்புகளை விட அதிகமாக உள்ளன.
இன்றுவரை, மலேசியாவில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 6,158 பேர் பலியாகியிருக்கின்றனர். நாட்டின் இறப்பு விகிதம் 0.74% ஆக உள்ளது.
சமீபத்திய இறப்புகளில் 34 பேர் சிலாங்கூரில், 21 கோலாலம்பூரில், நெகிரி செம்பிலன் (12), மலாஜ்கா (8), ஜொகூர் (6) எனப் பதிவாகி உள்ளன.
9,105 புதிய சம்பசங்களில் 4,682 சம்பவங்களுடப் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, கோலாலம்பூர் (1,247), நெகிரி செம்பிலன் (541), ஜொகூர் (392), கெடா (382) மற்றும் பஹாங் (300) ஆக உள்ளன.
தற்போது, 961 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 455 பேர் வென்டிலேட்டர் ஆதரவுடன் உள்ளனர்.
செயலில் உள்ள கோவிட் -19 நோயாளிகலுன் மொத்த எண்ணிக்கை 87,841 ஆக உயர்ந்துள்ளது!
0 Comments