loader
இதுவரை இல்லாத உச்சம்! இன்று 9,353 சம்பவங்கள்!

இதுவரை இல்லாத உச்சம்! இன்று 9,353 சம்பவங்கள்!

 

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10: மலேசியாவில் இன்று ஒரே நாளில் 9,353 கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம்  இன்று சனிக்கிழமை (ஜூலை 10) டுவீட் செய்துள்ளது.

இது ஒட்டுமொத்த சம்பவங்களின்  எண்ணிக்கையை 827,191 ஆக உயர்த்தியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 9)  9,180 சம்பவங்களாக இருந்த நிலையில், இன்று அதை விட அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். கடந்த மே 29 அன்று  9,020 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, தற்போது தொடர்ந்து இரு நாள்களாக 9 ஆயிரத்தில் இருப்பது நிலைமையை மோசமாக்கியுள்ளது.

சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவு பெற்றுள்ளன. சிலாங்கூரில் மட்டும் 4,277 ஆகவும், கே.எல் (1,398), மலக்கா (835) ஆகவும் பதிவாகியுள்ளன!

0 Comments

leave a reply

Recent News