ஓரேகான்: அமெரிக்காவின் வடமேற்கு மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கடந்த வாரத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்றுக்கு 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இவற்றில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.மாகாண கவர்னர் கேட் பிரவுன்
இந்நிலையில், பருவகால மாற்றத்திற்கு ஏற்ப தயார்படுத்தி கொள்ள பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், முன்னெப்போதும் இல்லாத வகையில் அனல் காற்று 95 பேரை பறித்துச் சென்றிருப்பது கொடூரம் எனவும் ஓரேகான் மாகாண கவர்னர் தமது வருத்தத்தப் பதிவு செய்துள்ளார்!
0 Comments