loader
நடிகர் பாண்டு காலமானார்!  கொரோனாவால் உயிரிழந்த சோகம்!

நடிகர் பாண்டு காலமானார்! கொரோனாவால் உயிரிழந்த சோகம்!

சென்னை, மே 6:  : பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

கொரோனா பாதிப்புக்குள்ளான பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் பாண்டு காலமானார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு அவரது பேச்சு, சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்!

0 Comments

leave a reply

Recent News