கோலாலம்பூர் ஜூன் -3
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை 6-வது முறையாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை டோட்டன்ஹாமை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, லிவர்புல் அணி வென்றது.
அந்த வெற்றியுடன் இன்று லிவர்புல் அணியின் 127-வது ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடவுள்ள நிலையில், லிவர்புல் அணியின் சென்டர் மிட்ஃபிளர் ஆட்டக்கார் ஜோர்டன் ஹண்டர்சன், வெற்றிக் கோப்பை மீது கால் வைத்து விமானத்தில் அமர்ந்த படி இருக்கும் படம் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மேற்கத்திய விளையாட்டாளர்கள் தாங்கள் வென்றெடுத்த கோப்பைகள் மீது கால் வைத்துப் படம்பிடிப்பது வழங்கம்.
அது அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது. ஆனால் பல ரசிகர்கள் தங்கள் அணிக்கு இந்தக் கோப்பை கிடைக்காதா என்று ஏங்கிவருகிறார்கள். அப்படி இருக்க, 6 முறை கோப்பையை வென்ற லிவர்புல், பல ஆண்டுகளாக இந்தக் கோப்பைக்காகக் காத்திருந்த லிவர்புல், அத்தகைய மாபெரும் கோப்பையை மதிக்கும் லட்சணம் இதுதானா? என்று சமூகவலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள் ரசிர்கள். இதனால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜோர்டன் ஹண்டர்சன்.
இப்படிபட்ட சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. பல புகழ் பெற்ற ஆட்டக்காரர்கள் இப்படித் தாங்கள் வென்ற கோப்பை மீது கால் வைத்துப் படம்பிடித்துள்ளனர். அது மேற்கத்திய விளையாட்டாளர்களின் பாணி.
இருந்தாலும், இந்தக் கோப்பைக்கு மரியாதை கொடுக்கும்படி பல ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, தங்கள் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.
இனி இப்படிச் சம்பவம் நடக்காமல் விளையாட்டாளர்கள் பார்த்துக்கொள்வார்களா?
0 Comments