loader
தலைநகரில் கனமழை!  ரயில் சேவை பாதிப்பு!

தலைநகரில் கனமழை! ரயில் சேவை பாதிப்பு!

 

கோலாலம்பூர், ஏப்ரல் 13: நேற்று திங்கட்கிழமை தலைநகரில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

ஜாலான் பெர்காசா, தாமான் மலூரி, தாமான்ராமா-ராமா சென்டாசாரி, புக்கிட் அமான்,பெர்மைசூரி போலீஸ் முகப்பு, பண்டார் ஸ்ரீபெர்மைச்சுரி, தாமான் ஈகான் எமாஸ்,ஜாலான் கஸ்காஸ், இண்டா மாஸ் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தாமான்ஷா மெலின் பெர்காசா ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மலூரி எல்.ஆர்.டி ரயில் நிலையம் மற்றும் பண்டான் ஜெயா எல்.ஆர்.டி ரயில் நிலையத்திற்கும் இடையில் மரம் சாய்ந்ததால் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

0 Comments

leave a reply

Recent News