பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 9: வரும் 15-வது பொதுத்தேர்தல் வரை அரசாங்கத்துடன் அம்னோ தொடர்ந்து நீடித்திருக்கும் என டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, அர்சாங்கத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க திருத்தம் இல்லாத தீர்மானத்தை அம்னோ பொதுப் பேரவை நிறைவேற்றியுள்ளதாகவும், அம்னோ பொதுப்பேரவைக்கு கட்சியில் மிகப்பெரிய அதிகாரம் இருப்பதால், அதில் எடுக்கப்பட்ட முடிவே கொள்கையாகும் என்று அவர் தெரிவித்தார்.
வரும் பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படாது என்றும் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படவிருப்பதாகவும் 2020-ஆம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது!
0 Comments