கோலாலம்பூர் , ஏப்ரல் 8- ரவாங் சுங்கை சோவுக்கு அருகே ஜாலான் கோலாலம்பூர்- ஈப்போ நெடுஞ்சாலையின் 32-வது கிலோமீட்டரில் இன்று காலை மணி 6.20 அளவில் நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில், பெரோடுவா கஞ்சில் காரிலிருந்து வெளியே விழுந்த ஆடவர் மரணம் அடைந்தார்.
அந்த கஞ்சில் காரை ஓட்டிய, லோரி ஓட்டுனரான 25 வயதுடைய நபர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாக உலுசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்பிரெண்டன் ரிட்சுவான் காலிட் தெரிவித்தார்.
கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லோரியின் பின்புற டயரில் மோதியது. அதைத் தொடரந்து புரோடுவா அஸ்சா காரில் மோதியது. அப்போது கஞ்சில் காரிலிருந்தவர் வெளியே தூக்கி எறியப்பட்டு, அவர் மீது புரோட்டோன் வீரா கார் மோதியதில் அவர் மாண்டார். இந்த விபத்தில் புரோடுவா அல்சா காரை ஓட்டிய மாணவரும் காயம் அடைந்தார். இந்த விபத்தில் 30 வயதுடைய லோரி ஓட்டுனர் மற்றும் புரோட்டோன் வீரா காரை ஓட்டிய 28 வயதுடைய பெண் இருவரும் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினர்!
0 Comments