(வெற்றி விக்டர் - ஆர் . பார்த்திபன்)
கிள்ளான் ஏப்ரல் – 2: கட்சித் தேர்தலை எதிர்கொள்ளும்போது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் எதிர்பார்ப்பை பார்க்க வேண்டும். ஆனால், பொதுத்தேர்தலைச் சந்திக்கும்போது மக்களின் எதிர்பார்ப்பைத்தான் பார்க்கவேண்டும் என ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
இதனை அனைத்துக் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
காலச் சூழல், மக்கள் எதிர்பார்ப்பு இதனைக் கருத்தில் கொண்டு நிதானமாக முடிவெடுக்க வேண்டுமே தவிர அடிமட்டத் தொண்டர்களின் எதிர்பார்ப்பை வைத்து முடிவெடுக்காதீர் என டத்தோ ஸ்ரீ சரவணன் உறுப்புக் கட்சிகளைக் கேட்டுக்கொண்டார்.
இப்போது மக்கள் நலன் கருதி ஒரு அரசு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலைச் சந்திப்பதற்கு முன் நிதானமாக ஒரு நிலையான முடிவை எடுப்போம் என டத்தோ ஸ்ரீ சரவணன் தமது உரையில் தெரிவித்தார்!
1 Comments
Supramaniam
Congrates!!! Let the struggle be a success