நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் பொதுமக்கள் முன்னிலையில் பேசினார்.
உடல் நலம் காரணமாக பேச இயலாத நிலையில் விஜயகாந்த் இருந்து வருகிறார்.
ஜெயலலிதா கலைஞர் காலத்திலேயே அரசியல் கட்சியைத் தொடங்கி, எதிர்க்கட்சித் தலைவரும் ஆனவர் விஜயகாந்த். துணிச்சலாகக் கருத்தை வெளியிட்டு வந்தவர். இடையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு அவர் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தத் தேர்தலை முன்னிட்டு அவர் மக்கள் முன்னிலையில் பேசினார்.
தட்டுத் தடுமாறி ஒரு குழந்தையைப் போல பேசினார். மக்கள் பலரும் கலங்கினர். அப்போது கூட "என் மக்களுக்கு ஒன்னுன்னா நான் சும்மா விடமாட்டேன்.... எல்லாரும் பத்திரமா வீட்டுக்குப் போகணும்... போனதும் போன் பண்ணனும்" என்ற போது மக்களின் மீதான அவரின் நேசத்தை உணர முடிந்ததாகச் சொல்கிறார்கள் அவரின் அபிமானிகள்.
அவர் ஜெயிக்கிறாரோ இல்லையோ பரிபூரண குணமாகி மீண்டு வரவேண்டும் என்பதே மக்களின் பிரார்த்தனையாய் இருக்கிறது!
0 Comments