கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், மீண்டும் பல இடங்களில் இரண்டாம் அலை உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கொரோனா இரண்டாம் பரவல் அலை அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 1800 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது ஊரடங்கு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
0 Comments