loader
இலங்கைக்கு மீண்டும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி! இந்தியா வழங்கியது!

இலங்கைக்கு மீண்டும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி! இந்தியா வழங்கியது!

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா உலக நாடுகளுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அண்டை நாடான இலங்கைக்கு 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை கடந்த ஜனவரி மாதம் பரிசாக அளித்தது.

அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அந்த தடுப்பூசிகள் முன்கள பணியாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்திய சீரம் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தடுப்பூசிகள் வாங்குவதற்கு இலங்கை அரசு  ஒப்பந்தம் செய்தது.

அந்த அடிப்படையில் 5 லட்சம் தடுப்பூசிகள், இலங்கைக்கு இந்திய சீரம் நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த தடுப்பூசிகளை இலங்கை நேற்று பெற்றுக்கொண்டது!

0 Comments

leave a reply

Recent News