நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. வேலூர் மக்களவைத் தொகுதி தவிர நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது. இதனால், அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 45 மையங்களில் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு (மலேசிய நேரம் காலை 10:30) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 39 மக்களவைத் தேர்தல், 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 11,659 ஊழியர்கள் 4,245 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 15,904 பேர் மின்னணு வாக்குகளை எண்ண உள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு மேல் வாக்குகளை எண்ணும் முகவர்கள் வெளியில் சென்றால், மீண்டும் அவர்களுக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது!
0 Comments