loader
மாவீரன் பிரபாகரனுக்கு காதுகுத்து! 108 கிடா வெட்டி சீமான் வீட்டு விழா!

மாவீரன் பிரபாகரனுக்கு காதுகுத்து! 108 கிடா வெட்டி சீமான் வீட்டு விழா!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டார். தேர்தல் திருவிழா தொடங்கும் முன் தன் குடும்பத் திருவிழா ஒன்றை நடத்த தடல்புடல் ஏற்பாடுகளைச் செய்தார். 5000 விருந்தினர்கள்... 108 கிடாய்... என பிரம்மாண்டமாக நடந்தது அந்த விழா.

நாம் தமிழர் கட்சியைத் தொடங்கி நேரடி அரசியலில் களமாடிவந்த சீமான், நெடுநாட்களாக திருமணம் செய்யாமல் இருந்தார். தான் ஒரு ஈழத்தமிழ் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் முன்னாள் தமிழக அமைச்சர் காளிமுத்துவின் மகளான கயல்விழிக்கும் சீமானுக்கும் காதல் மலர்ந்து, 2013ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு மகன் பிறந்தார். தனது மகனுக்கு 'மாவீரன் பிரபாகரன்' என்று பெயர் சூட்டினார் சீமான்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை அடுத்த முடிகரை எனும் கிராமத்திலுள்ள வீரகாளி கோயிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகனுக்கு காதணி விழா நடைபெற்றது.

108 ஆட்டுக்கிடாய் வெட்டப்பட்டு கோயில் வெளியே விருந்தும் வைக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்துவந்த நாம் தமிழர் கட்சியினர் ஃபிளெக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர்.

இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்!

0 Comments

leave a reply

Recent News