loader
மீண்டும் சூர்யா - ஜோதிகா!

மீண்டும் சூர்யா - ஜோதிகா!

சூர்யா - ஜோதிகா இருவரும் திருமணத்திற்கு முன்பு, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் 6, சில்லுன்னு ஒரு காதல் என ஏழு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு நட்சத்திரத் தம்பதிகளான அவர்கள், இதுவரை எந்தப் படத்திலும் இணையவில்லை.

திருமணத்திற்குப் பிறகு 36 வயதினிலே படத்தில் ஜோதிகா நடித்ததைத் தொடர்ந்து கதையின் நாயகியாக தனக்கான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்தநிலையில், பூவரசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களை இயக்கிய ஹலிதா சமீம், சூர்யா-ஜோதிகாவை மீண்டும் இணைக்க ஒரு கதை ரெடி பண்ணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒப்புதலையும் அவர்களைச் சந்தித்து பெற்று விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள ஹலிதா சமீம், அவர்களை மீண்டும் ஜோடியாக திரையில் கொண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News