சர்வதேச பாப் இசை உலகில் மிகவும் பிரபலமானவர் ரியான்னா. இவர் இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக அண்மையில் வெளியிட்ட கருத்து உலக அளவில் டிரண்டாகி வருகிறது.
இதனால் இந்திய ஆளும் பிஜேபி உட்பட இந்திய பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
ரியன்னா இது மட்டுமின்றி மியான்மரில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலை குறித்த கருத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
சர்வதேச அளவில் பிரபலம் என்பதால் இவரது இடுகை, கண்டங்களைக் கடந்தும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகப் பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்தை பதிவிடும் முன்பு இவரது ட்விட்டர் பின்தொடருவோரின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 10 கோடியே பத்து லட்சம் ஆகியிருக்கிறது. அதாவது 10 லட்சம் பேர் கூடுதலாக ரியான்னாவை பின்தொடர இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பான அவரது இடுகை காரணமாகியிருக்கிறது!
0 Comments