loader
14 நாடுகளில் புதிய வகை கொரோனா! அச்சத்தில் மக்கள்!

14 நாடுகளில் புதிய வகை கொரோனா! அச்சத்தில் மக்கள்!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் உருவாகி ஓராண்டு முடிந்துள்ள நிலையில், அதன் உருமாறி வருகிறது. உருமாறுகிற புதிய கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் பரவி வருகின்றன.

சமீபத்தில் இங்கிலாந்தில் தோன்றிய உருமாறிய வைரஸ், சீனாவில் முதலில் உருவாகி உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ்களை விட வேகமாகப் பரவுகிற தன்மையை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், தற்போது உருமாறிய 3 கொரோனா வைரஸ்கள், 14 நாடுகளில் பரவியுள்ளதாகவும், அவற்றின் தொற்று மற்றும் தீவிரத் தன்மை அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த 3 வைரஸ்களில் ஒன்றுதான், இங்கிலாந்து நாட்டிலும், தென் ஆப்பிரிக்காவிலும் காணப்பட்ட வைரஸ் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

இதையொட்டி, பான் அமெரிக்க சுகாதார அமைப்பின் நிகழ்வு மேலாளர் சில்வைன் ஆல்டிகேரி கூறும்போது, “இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட 2 வகை வைரஸ்கள், அமெரிக்காவின் பிராந்தியத்தில் சமூகல் பரவலை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இதுவரை அந்த இரு நாடுகளில் இருந்தோ அல்லது அந்த நாடுகளுக்கோ பயணிக்கும் நபர்களிடம் இருந்து மட்டுமே அந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது” என குறிப்பிட்டார்.

மூன்றாவது வகை வைரஸ், பிரேசில் நாட்டின் அமேசோனாஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இது உள்நாட்டில் பரவலாக இருக்கிறது. அங்குள்ள மானுஸ் நகரில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள பலருக்கு அந்த வைரஸ் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

சீனாவில் இருந்து வந்த அசல் கொரோனாவை விட இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா அதிக மரண ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு கூறுகிறது. இவ்விரு வைரஸ்களும் அதிகமாகப் பரவுகிற நிலை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News