loader
கொரொனா: இன்று 3, 211 சம்பவங்கள்! 8 பேர் மரணம்!

கொரொனா: இன்று 3, 211 சம்பவங்கள்! 8 பேர் மரணம்!


புத்ராஜெயா, ஜன 15: நாட்டில் இன்று  3,211 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 151, 066 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இந்நோய்த் தொற்றினால் இன்று ஒரே நாளில் 8 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாட்டின் இறப்பு எண்ணிக்கை 586 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,939  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 115, 227 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது 35, 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 87 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News