உலகிலேயே உன்னத திருவிழாவாகக் கருதப்படும் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் நன்னாள்... இவ்வருடமும் வழக்கம்போல் மகிழ்ச்சி திருநாளாய் அமையட்டும்.
இந்த MCO காலகட்டத்தில் கட்டுப்பாடுகள் நிறைந்திருந்தாலும்... எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் இடைவிடாது உயிர்கள் செழிக்க உதித்துக் கொண்டே இருக்கும் ஆதவனை வணங்குவோம்.
விவசாயிகள் கால்நடைகள், உழவு பெருமக்கள் அனைவருக்கும் நன்றி சொல்வோம்.
நாடும் மக்களும் சுபிட்சமாய் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.
நலம் பெறுவோம் வளம் பெறுவோம்.
அனைவருக்கும் 'தமிழ் லென்ஸி'ன் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
0 Comments