கோலாலம்பூர் ஜனவரி -11
மகளிர் குடும்ப, சமூக நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரீணா ஹருன் கோவிட் -19 பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார் என மகளிர் குடும்ப சமூகநல அமைச்சு அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்னதாக நேற்று புத்ரா ஜெயாவில் கோவிட் - 19 பரிசோதனையை அமைச்சர் ரீணா ஹாருன் மேற்கொண்டார்.
இதனையடுத்து, இன்று கோவிட் -19 பாதிப்பு இருக்கிறது என்று அறிக்கை வந்தவுடன், காலை 11 மணியளவில் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!
0 Comments