புத்ராஜெயா: பிரதமர் துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் முஸ்தபா முகமது கோவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து கோத்தாபாருவுக்கு வந்தபோது அவர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பிரதமர் துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது கோத்தா பாருவில் உள்ள ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கோரியதுடன், தமக்காகப் பிரார்த்திக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
0 Comments