மெந்தகாப் ஜனவரி-10
நாட்டில் பெய்து வரும் கன மழையால் பல மாநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், பகாங் மெந்தகாப், லஞ்சாங் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்குத் தொழில் அதிபர் டத்தோ பத்மநாதன் உதவிகள் செய்தார்.
மெந்தகாப் டேசா பத்தி தேசியப் பள்ளியில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு அவர் இந்த உதவிகளைச் செய்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதி மக்களுக்கும் தமது உதவிகள் தொடரும் என்று டத்தோ பத்மநாதன் தெரிவித்தார்.
பெந்தோங் மாவட்ட கல்வி முன்னேற்றக் கழகத்தின் ஆசிரியர் சண்முகம், டத்தோ பத்மநாதன் சார்பாக உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்!
0 Comments