loader
கொரோனா: ஒரே நாளில் 3, 321 பேர் குணம் பெற்றனர்! 2,295 கொரோனா சம்பவங்கள் பதிவு! 9 பேர் மரணம்!

கொரோனா: ஒரே நாளில் 3, 321 பேர் குணம் பெற்றனர்! 2,295 கொரோனா சம்பவங்கள் பதிவு! 9 பேர் மரணம்!

புத்ராஜெயா, ஜனவரி 2- இன்று  2, 295 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 117, 373 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 3, 321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுநாள் வரைக்குமான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94, 492 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த் தொற்றினால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாட்டின் இறப்பு எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது 22, 398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 51 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News