கோலாலம்பூர் டிசம்பர்-30
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்ற வேளையில், புதிய தலைவராக மக்கள் ஒசை ஆசிரியர் கு.தேவந்திரன் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக மலேசிய நண்பன் ஆசிரியர் கு.சா. ராமசாமி வெற்றி பெற்றார். புதிய செயலாளர்களாக தமிழ் நேசன் டி.வி ஆசிரியர் சூர்யா குமாரும், தமிழ் லென்ஸின் நிருபர் ஆர்.பார்த்திபனும் போட்டியின்றித் தேர்வு பெற்றனர். பொருளாளராக பெர்னாமா தமிழ்ச் செய்தி செய்தியாளர் கிரிஸ்ட் வெற்றி பெற்றார்.
செயலவை உறுப்பினராக அநேகன் தர்வீன் மற்றும் தமிழ் நேசன் ரவி ஆகியோர் வெற்றி பெற்றனர்!
0 Comments