புத்ராஜெயா, டிசம்பர் 24- இன்று 1, 581 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100, 318 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சிலாங்கூரில் மட்டும் 491 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனை அடுத்து கோலாலம்பூரில் 379 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சபாவில் 249 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இன்று 1,085 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81, 099 ஆக உயர்ந்துள்ளது.
இந்நோய்த் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாட்டின் இறப்பு எண்ணிக்கை 446 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது 18, 773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!
0 Comments