loader
புதிய வகை கொரோனாவுக்கு பயோன்டெக் தடுப்பூசி பயனளிக்கும்! பயோன்டெக் நிறுவனம் நம்பிக்கை!

புதிய வகை கொரோனாவுக்கு பயோன்டெக் தடுப்பூசி பயனளிக்கும்! பயோன்டெக் நிறுவனம் நம்பிக்கை!

பெர்லின்: அமெரிக்காவின் பைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தடுப்பூசிக்கு உலகிலேயே முதன் முதலில் இங்கிலாந்து தான் ஒப்புதல் வழங்கியது. அங்கு கடந்த 8-ஆம் தேதி முதல் மக்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராக தங்களது தடுப்பூசி வேலை செய்யும் என்று பயோன்டெக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி உகுர் சாஹின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் எங்கள் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு ஆற்றல் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராகச் செயல்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் சோதனை செய்யப்பட்டால் மட்டுமே நாங்கள் அதை உறுதியாக அறிவோம். சோதனையின் தரவுகளைப் பெறுவதற்கு இப்போதிலிருந்து சுமார் 2 வாரங்கள் தேவைப்படும்” எனக் கூறினார்!

0 Comments

leave a reply

Recent News