இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் ஆபத்து உள்ளதாகக் கூறி இந்திய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் என பிரதமர் மோடி உறுதியளித்தள்ளார்.
இந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக கடந்த 20 முதல் 22 ஆண்டுகளாக மத்திய அரசும், மாநில அரசுகளும் விரிவாக ஆலோசனை நடத்தி வந்ததாகவும், விவசாய அமைப்புகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கூட இதற்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தங்கள் அரசியல் தளத்தை இழந்தவர்கள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகிறார்கள். இந்த அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே தமது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்!
0 Comments