புத்ராஜெயா, டிசம்பர் 10- இதுவரை இல்லாத உச்சத்தில் நாட்டில் இன்று ஒரே நாளில் 2,234 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 24-ஆம் தேதி பதிவான 2,188 சம்பவங்களே இதற்கு முன் பதிவான அதிகபட்ச பதிவாகும்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78, 499 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இன்று ஒரே நாளில் 1,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66, 236 ஆக உயர்ந்துள்ளது.
இந்நோய்த் தொற்றினால் இன்று மூவர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 396 ஆக உயர்ந்துள்ளது.
0 Comments