பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த குரூப்பிலும் சேரமால் தனியாளாக விளையாடி ரசிகர்களைல் கவர்ந்தவர் சனம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் சனம் எவிக்ஷன், ரசிகர்கள் மட்டுமின்றி ஹவுஸ்மேட்ஸ்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.
மனசே இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சனம் ஷெட்டி. மேலும் வார்த்தைக்கு வார்த்தை பாலாஜியிடம் நீங்கள்தான் போக வேண்டியது, உங்களுக்கு பதில் நான் போகிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தார்.
இந்நிலையில் சனம் ஷெட்டி வரும் 12 ஆம் தேதி நடைபெறும் ஈவன்ட் ஒன்றில் பங்கேற்க உள்ளதாகவும் அதற்காகதான் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் பரவின. மேலும் அதற்கான இன்விடேஷனும் வைரலானது.
இது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சனம் ஷெட்டியின் மொபைல் நம்பர் இன்னமும் நாட் ரீச்சபிளிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழையலாம் என்று கூறப்படுகிறது.
அவர் நம்பர் நாட் ரீச்சபிளில் இருப்பதை சுரேஷ் சக்கரவர்த்தியும் நடிகை வனிதாவும் உறுதி செய்துள்ளனர்.
சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காகதான் சனம் ஷெட்டியை மீண்டும் நிகழ்ச்சி குழு குவாரண்டைனில் வைத்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது!
0 Comments