கோம்பாக் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, இன்று காலை 10.30 மணியளவில் அப்பகுதி மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்ததாக, கோம்பாக் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஏ.சி.பி அரிஃபை தராவே தெரிவித்தார்.
கோம்பாக் பகுதியின் 10-வது கிலோமீட்டரில் இருக்கும் காட்டுப் பகுதியில் உள்ள அந்தக் காலியான வீட்டிற்கு, தீயணைப்பு மற்றும் தடயவியல் குழுவினர் சென்றதோடு,
மோப்ப நாய் பிரிவு அதிகாரிகளும் போலீஸுடன் விரைந்தனர்.
அங்குத் தலை துண்டிக்கப்பட்டு, தொங்கிய நிலையில் கிடந்த எலும்புக்கூடைக் கண்டெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேல் விசாரணைக்காக அந்த எலும்புக்கூடு கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அரிஃபை தெரிவித்தார்.
இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் கோம்பாக் போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!
0 Comments