loader
கையூட்டுப் பெற்ற வழக்கில் டத்தோ ஸ்ரீ தெங்கு அட்னான் விடுதலை!

கையூட்டுப் பெற்ற வழக்கில் டத்தோ ஸ்ரீ தெங்கு அட்னான் விடுதலை!


ஒரு வர்த்தகரிடம் இருந்து 10 லட்சம் வெள்ளி கையூட்டுப் பெற்ற வழக்கில், முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்  விடுவிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் செக்‌ஷன் 254, பிரிவு 1-இன்  கீழ் இவ்வழக்கைத் தொடர தமது தரப்பு விரும்பவில்லை என, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜூலியா செய்த விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்கி, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

புத்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஸ்ரீ தெங்கு அட்னான், தொழிலதிபர் தான் ஹொக் சுவானிடமிருந்து 10 லட்சம் வெள்ளி கையூட்டாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இக்குற்றத்தைப் புரிவதற்கு தெங்கு அட்னானைத் தூண்டிய  குற்றத்தை, தான் ஹொக் ஒப்புக்கொண்டதால், தானுக்கு 10 லட்சம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply