சுமூகத் தீர்வு காணாமல் 80 வருட கோயிலையும் உடைத்துவிட்டு, அதைக் கேள்வி கேட்ட ம.இ.காவையும் கடுமையாகச் சாடியதோடு, இந்திய சமுதாயத்தையே குடிகாரச் சமுதாயமாகச் சித்தரித்துள்ள கெடா மாநில மந்திர புசார், இந்திய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சிலாங்கூர் ம.இ.கா வலியுறுத்தி உள்ளது.
இந்திய சமுதாயத்திற்காக குரல் எழுப்பிய தேசிய ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு, சிலாங்கூர் ம.இ.கா ஆதரவு வழங்குவதோடு, அவர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும அவருக்குப் பக்கபலமாக இருப்போம் என சிலாங்கூர் மாநிலத் தொடர்புகுழுத் தலைவர் எம்.பி ராஜா தெரிவித்தார்.
அதோடு, கெடாவில் இடிக்கப்பட்ட கோயிலை, கெடா மந்திரி புசார் திரும்ப எழுப்பித் தரவேண்டும் என்பதோடு, அதன் செலவையும் மாநில அரசு ஏற்கவேண்டும் என, சிலாங்கூர் ம.இ.கா வலியுறுத்தி உள்ளது!
0 Comments