ஈப்போ, டிசம்பர் 6- பேராக் மாநிலத்தின் முதலமைச்சருக்கான புதிய வேட்பாளர் பெயரை, மிக விரைவில் அம்னோ அறிவிக்கும் என அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இதுகுறித்து பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் முன்மொழியப்படும் என்று அவர் அறிவித்தார். மற்ற தரப்பினருடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், எத்தனை வேட்பாளர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருக்கிறது என்பது குறித்து அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி புசாருக்கான வேட்பாளர் பெயரை அம்மாநில சுல்தானிடம் முன்வைப்பேன். சுல்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டு அந்த முன்மொழிவு இருக்கும். ஏனெனில், பேராவின் புதிய மந்திரி புசாரை தீர்மானிப்பது முற்றிலும் மாநில சுல்தானின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று அவர் தெரிவித்தார்!
0 Comments