வாஷிங்டன்: தெற்காசியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய சக்தியாக இந்தியா இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதனை மேம்படுத்தும் வகையில், முக்கிய ராணுவத் தளவாடப் பொருள்களை 90 மில்லியன் டாலருக்கு இந்தியாவிற்கு விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கையின் மூலம் அமெரிக்க-இந்தியா உறவை வலுப்படுத்தவும், ஒரு பெரிய சக்தி மிக்க கூட்டாளியின் பாதுகாப்பை மேம்படுத்தவும் முடியும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் (டி.எஸ்.சி.ஏ) தெரிவித்துள்ளது.
0 Comments