loader
இது வரை இல்லாத உச்சத்தில் கொரோனா! ஒரே நாளில் 2,188 சம்பவங்கள்! நால்வர் மரணம்!

இது வரை இல்லாத உச்சத்தில் கொரோனா! ஒரே நாளில் 2,188 சம்பவங்கள்! நால்வர் மரணம்!

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 24-

நாட்டில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 2,188 கொரோனா சம்பவங்கள் பதிவாகியிருப்பது, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று 2,188 சம்பவங்கள் பதிவானதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58, 847 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்நோய்த்தொற்றினால் இன்று நால்பர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,673 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்நோயிலிருந்து  இதுவரைக்கும் 44, 153 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை 14, 353 ஆக உள்ளது.

தற்போது, ​​112 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 49 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News