பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 23- நாட்டில் இன்று 1,885 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56, 659 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்நோய்த்தொற்றினால் இன்று இருவர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 883 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நோயிலிருந்து இதுவரைக்கும் 42, 480 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை 13, 842 ஆக உள்ளது.
தற்போது, 115 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 48 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது!
0 Comments